Posts

Showing posts from February, 2026

நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க!

"நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க" இந்த வாக்கியத்தை எத்தனை முறை கேட்டிருப்பீர்கள்? இதை ஒரு காரணமாக எத்தனை முறை கேட்டிருப்பீர்கள்? கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும், இந்த வாக்கியம் இரண்டு தலைமுறைகளைத் தடம் புரளச் செய்திருக்கிறது. விருப்பப்பட்ட எதையும் செய்யவிடாமல் தடுக்க, கஷ்டமாக இருந்தாலும் அதையே தொடர்ந்து செய்ய, உரிமைகள் பறிக்கப்பட்டு அடிமைத்தனம் போன்ற நிலையில் இருந்தாலும், மற்றவர்கள் தவறாக எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காகக் கொடுக்கப்படும் முட்டுக்கட்டை. இந்த நிலையை எதிர்த்து போராடி, யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, நான் இதைச் செய்வேன் என்ற தைரியம் கொண்ட சிலர் வந்த முதல் தலைமுறையில் நானும் இருக்கிறேன். ஆனால் நான் எத்தனை முறை இந்தக் குட்டிச்சுவரைத் தாண்டி வந்தேன் என்று கேட்டால், விரல் விட்டு எண்ணி விடலாம். அதுவும் ஒரு கை விரல்கள் போதும். என் தாயிடம் கேட்டால், நான் தினமும் நான்கு முறை இப்படி ஏதாவது செய்கிறேன் என்று சொல்வார். இதில் மட்டும் அவரை நம்புவது தவறு. நான் பாவம், அப்பாவி. நாலு பேர் அல்ல, ஒருவரும் என்னைப் பற்றி எதுவும் தவறாகப் பேசிவிடக் கூடாது என்று சொல்லிச் சொல்லி வளர்க...

செயற்கை நுண்ணறிவின் கடவுள்

Image
  முன்குறிப்பு : செயற்கை நுண்ணறிவு என்ற பெயரை பார்த்தவுடன் ஏதோ பெரிய சமாச்சாரம் என்று எண்ணி இந்த பக்கத்தை மூடி விட வேண்டாம். பொது மக்களுக்கு புரியும் எளிய நடையில் AI அல்லது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லலாம். (செம்மொழியான எம் தாய் மொழியை விட ஆங்கிலம் எளிய மொழி ஆன கோர சம்பவத்தில் பங்கு கொண்ட முதல் தலைமுறை என்பதில் வெட்கம் கொள்கிறேன்!) chatgpt, gemini, canva போன்ற பெயர்களை உங்கள் கைப்பேசிகளில் பார்க்காமல் இருந்திருக்க மாட்டீர்கள். ஐம்பது வயதிற்கு குறைந்தவராக இருந்து, தற்போது பணியில் இருப்பவராக இருந்தால் இவற்றை பயன்படுத்தாமல் இருந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். அதுவும் chatgpt என்னும் இந்த நவயுக ஆபத்பாந்தவன் கை கொடுக்காத இடங்களே இல்லை இன்று. கல்யாண வீடுகளில் இரண்டாம் வரிசையில் முதல் ஆளாக அமர்ந்து அனைவரிடமும் கலகலவென பேசும் தூரத்து சொந்தகார மாமா போன்றது இந்த chatgpt என்னும் செயற்கை நுண்ணறிவு தளம். எந்த தலைப்பு கொடுத்தாலும் பேசுவார். எத்தனை முறை வேண்டுமானாலும் கூறுவார். கூறியதையே மறுபடி மறுபடி வெவ்வேறு வார்த்தைகள் கோர்த்து கூறுவார். அவர் கூறுவது எல்லாமே உண்மை தானா என்று ...