Posts

Showing posts from December, 2021

உணர்ச்சிகளின் வசம்

  பதினோராம் வகுப்பு சேர்க்கையின் போது என் பள்ளியில் பல மாணவர்கள் இரண்டாம் மொழியை தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு மாற்றிக்கொண்டார்கள். வேறு பள்ளியில் படித்த நண்பர்களை கேட்டு பார்த்தால், அவர்கள் பிரெஞ்சு மொழிக்கு மாறிவிட்டதாக கூறினார்கள். அனைவரும் கொடுத்த காரணம் - பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்க சுளுவான மொழி தான் உதவும் என்றார்கள். எனக்கும் சரி, என் தந்தைக்கும் சரி, அந்நேரத்தில் ஒரு அகந்தை. மதிப்பெண்களுக்காக தாய் மொழியை விட்டு கொடுப்பதா என்று. அதனால் நான் ஆங்கில வழி கல்வியின் பொது தேர்வுக்கு தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக படித்து கணிதம் அறிவியலை போல தமிழிலும் எண்பது சதவிகிதம் பெற்று தேர்ச்சி பெற்றேன். ஒரு அகந்தையோடு படித்த தமிழை அதன் பிறகு நான் தொடவே இல்லை என்ற கசப்பான உண்மையை  ஐந்தரை ஆண்டுகள் கழித்து நான் உணர்ந்தேன். நாள் ஒன்றிற்கு எட்டு மணி நேரம் வகுப்பு மற்றும் நான்கு மணி நேரம் பேருந்து பயணம் என்ற பொறியியல் கல்லூரி வாழ்க்கையில் குமுதம் குங்குமம் அளவிற்கு கூட தமிழுடன் தொடர்பு இல்லாமல் போனது. அடுத்து படிப்பிற்கு சற்றும் சம்பந்தமே இல்லாத ஒரு மென்ப...

மனம் விரும்புதே உன்னை!

 என்னுடைய இந்த மூன்றாம் பதிவின் துவக்கத்தில் நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். கண்ணம்மா சமய சொற்பொழிவாளர் கிடையாது. வாய் கிழிய நியாயம் பேசி திரிகிறோமே அதை பொதுவாக சொல்லி பலரின் கருத்துக்களை கேட்டு மேலும் நம் பொது அறிவை மேம்படுத்திக்  கொள்ளலாமே என்ற ஒரே நோக்கம் தானே தவிர. நான் முற்றும்  உணர்ந்த ஞானியும் இல்லை, என் பேச்சில் இருக்கும் கருத்துக்கள் தான் கச்சிதமான உண்மைகள் என்ற தலைகனமும் இல்லை. மாற்று கருத்துக்களையும் ஆரோக்கியமான விவாதங்களையும் எதிர்பார்த்து தான் இப்பதிவுகளை வெளியிடுகிறேன். கடவுள் கடவுள் கடவுள். முதல் இரண்டு பதிவும் இதே புராணங்கள் தான் என்று சலித்துக் கொள்ள வேண்டாம். தலைப்பே கொடுக்காவிட்டாலும் கேட்பவருக்கு தலை சுற்றும் வரை பேசுவது என் வழக்கம். அதனால் இறைவன் என்ற தலைப்பை கையில் எடுத்தவுடன் பலதரப்பட்ட கருத்தலைகள் வந்து ஒன்றோடு ஒன்று மோதி விளையாடுகின்றன என் மனதில். அதில் அர்த்தமுள்ள சிலவற்றை எழுத நினைத்தேன். பக்கங்கள் நீண்டுவிட்டது. இத்துடன் கடவுளை சற்று இளைப்பாற அனுப்பி விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். சற்றுமுன் கூறினேனே … தலைப்பே இல்லாமல் பக்கம் ப...

நானும் கடவுள் எனும் நம்பிக்கையும்!

2020 இன் தீபாவளிக்கு வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் காட்சி. ஆர்.ஜே. பாலாஜி ஒரு தொலைக்காட்சி செய்திகளுக்காக “கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறது. இந்த அநியாயங்கள் நடப்பதை பார்த்துக்கொண்டே சும்மா இருக்கிறதே” என்று மிக ஆவேசமாக பேசியிருப்பார். அந்த செய்தி துணுக்கை ஒளிப்பதிவு செய்து முடித்ததும் வேக வேகமாக ஓடிச்சென்று  அருகே இருந்த ஆலமரத்தடி பிள்ளையார் சிலையிடம் போய் “அய்யோயோ என்ன மன்னிச்சுடு கடவுளே. நான் தெரியாம பேசிட்டேன். என்ன தண்டிச்சிடாத” என்று கதறுவார். சென்ற பதிவில் ஹிந்து மத கடவுள் எல்லாமே போர் செய்து அநியாயம் செய்து தான் கடவுள் ஆனது என்று கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டேன் என்று எனக்கு அடுத்த நாள் தோன்றியது. அந்த படத்திலாவது ஒரு காட்டுக்கு பிரச்சனை என்று ஆர்.ஜே. பாலாஜி அழைத்ததும் நயன்தாரா வந்து கூடவே நின்று உதவினார். நான் பேசிய பிரச்சனை பல யுகங்களாக நடக்கிறது என்றல்லவா குற்றம் சாட்டினேன். இதை சரி செய்ய சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி. ராமராவ், சாவித்ரி, ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா என அனைவரும் ஒன்றாக வந்தாலும் தீராத பிரச்சனை ஆயிற்றே. ஜெர்மன் நாட்டின் வரைபடத்தில்...

கடவுளை எங்கே காணலாம் ???

  ஏறக்குறைய நான்கு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு வெள்ளிக்கிழமை இரவு, வழக்கம் போல, அடுத்த இரண்டு நாட்கள் பணியிடத்திற்கு செல்ல வேண்டாம் என்ற மிதப்பில், வகையான உணவு ஒன்றை வாங்கிவந்து எனது வரவேற்பறையில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு கணினியில் சினிமா படம் ஒன்றை ஓட செய்தேன். கூடுதல் ஒலிபெருக்கி ஒன்றை கணினியுடன் தொடர்பு செய்து நல்ல வாட்டமாக சோபாவில் அமர்ந்து சுட சுட சுவையான உணவை ரசித்துக்கொண்டே அந்த படத்தை பார்க்க தொடங்கினேன். முதல் ஐந்து நிமிடத்திலேயே “என்ன டா மானிட பிறவி ” என்று மனம் நொந்து போனேன். காரணம் - நான் பார்க்க தேர்ந்தெடுத்த படம் ‘ஜெய் பீம்’.  உடனே யாரும் “அட இவளும் இதே பிரச்சனை ய தான் பேசுறாளா?” என்று படிப்பதை நிறுத்திவிட்டோ, “இவ சொல்றது லேந்து ஏதாவது தப்பு கண்டு புடிச்சே ஆகணுமே” என்று ஆர்வ கோளாறோடு கண்ணை உருட்டி கொண்டோ மேலே போக வேண்டாம். நான் அந்த படம் கூறிய, கூற விரும்பிய, சிலர் கண்ணுக்கு பட்ட, பலரின் அறிவு கண்களை திறந்த எந்த விஷயத்தைப் பற்றியும் இங்கே பேச போவதில்லை. குறிப்பாக இந்த பதிவில் பேசப்  போவது இல்லை.  மாநகர வாழ்க்கை தான் மக்களின் சராசரி வாழ்க்கை எ...