Posts

Showing posts from January, 2022

ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா? அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா? பாரதிதாசனின் அற்புத வரிகளுக்கு தண்டபாணி தேசிகர், தேஷ் என்ற ராகத்தில் இசையமைத்த இந்த பாடல், உண்மையில் எனக்கு கடந்த சில வாரங்களாக இன்பம் சேர்த்து வெற்றி கண்டுள்ளது. 1951 ஆம் ஆண்டு வந்த ‘ஓர் இரவு’ திரைப்படத்தில் வந்த பாடலும் சரி, சமீபத்தில் சஞ்சய் சுப்பிரமணியன் மேடையில் பல ஸ்வரஜதி சங்கதிகளுடன் அசத்திய பாடலும் சரி “இன்பம் சேர்க்க மாட்டாயா, மாட்டாயா?” என்று நம்மிடம் கேட்டுக்கொண்டே உலகத்தை மறக்க செய்கின்றன. இன்பம் சேர்க்க யாழுமில்லை, கொரோனாவின் புண்ணியத்தில், கைபேசியின் ஊடே வரும் குரல்களையும் காணொளிகளையும் தவிர, அருகே அன்புமில்லை. இருந்தும், நேரும் துன்பங்கள் மறையவில்லை என்றாலும், அவை மனதில் ஏற்படுத்தும் ரணங்களும் தவிப்புகளும் சாந்தம் பெற்று, மன அமைதிக்கு இட்டு செல்கிறது இந்த தேஷ் ராகம். மென்மையான ஸ்வரஸ்தானங்கள் கொண்ட இந்த பாடலை வாசகர்கள் ஒருமுறை கேட்குமாறு பரிந்துரைக்கிறேன். கவிஞர் வாலி ஒரு பேட்டியில் “எல்லா மனுஷனுக்க...

தூக்கம் விற்று தலையணை வாங்கி…

 டிசம்பர் மாதம் கடைசி வாரம் முதல் எனது நெட்பிளிக்ஸ் முன் பக்கத்தில் ஒரு புதிய ஹாலிவுட் திரைப்படம் வந்து வந்து முன்னே நின்று “என்னை பார். என்னை பார்.” என்பதை போல நச்சரித்து கொண்டே இருந்தது. Leonardo Dicaprio வின் முகத்தை பல்வேறு கோணங்களில் காட்டி விளம்பரம் செய்தது நெட்பிளிக்ஸ். அவர் படத்தை பார்க்கும் அளவிற்கு எனக்கு இப்போது பொறுமை இல்லை என்று தவிர்த்துக் கொண்டே வந்தேன்.  ஒரு வழியாக சென்ற வாரம் ஞாயிறு அன்று எனது தோழி வீட்டில் Don't Look Up என்ற அந்த படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. திரையரங்கு அனுபவம் போலவே தோழியின் புது ப்ரொஜெக்டரில் திரைப்படத்தை ஓட செய்து, ப்ளூ டூத் ஒலிபெருக்கி, வசதியான பீன் பேக் இருக்கை மற்றும் சேமியா உப்புமாவுடன், பல நாட்கள் கழித்து நாங்கள் எங்கள் பாணியில் ரசித்து பார்த்தோம். அதில் நடித்தவர்களில் Leonardo DiCaprio, Jennifer Lawrence, Jonah Hill, Cate Blanchett இவர்களை தவிர மற்றவர்களை பெரிதும் அறியவில்லை நான். ஒரு சிறிய காட்சியில் வந்த ஒரு முகம்… எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று சிந்தித்தேன். அந்த தருணத்தில் தோன்றவில்லை. பின் விக்கிபீடியா என் தலையி...

மணி சாரின் பார்வையில் கல்கி…

Image
 2000 ஆண்டு மே மாதம், மூன்றாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறையில் எனது பாட்டி வீட்டில் இருந்தபோது, அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த  என்னுடைய சித்தி, என்னையும் இன்னொரு சித்தி பெண்ணையும் கோயம்பேடு ராகினி ரோகினி திரையரங்கிற்கு அழைத்து சென்றாள். திரையிலிருந்து கடைசி வரிசையான A  வரிசையில் அமர்ந்து பார்த்தோம். எட்டு வயது சிறுமியான நான் கையிலிருக்கும் பாப் கார்ன் மறந்து போகும் அளவிற்கு ஈடுபாட்டுடன் பார்த்த படம் “அலைபாயுதே”. வெள்ளை சட்டையும் நீல வண்ண மேல் சட்டையும் அணிந்து கொண்டு, கருப்பு நிற கூலர்ஸும் ஹெட்போனும் மாட்டிக்கொண்டு, சிங்கப்பல் சிரிப்புடன் மாதவன் வண்டியில் வரும் காட்சியில் அப்படி என்ன தான் என்னை கவர்ந்ததோ. திரைப்படத்தின் முடிவில் ஷாலினியின் தலையோடு தலை சாய்த்து கண்ணீர் மல்க காதல் வசனங்கள் பேசி, காட்சி முடிந்து  “A Film by  Maniratnam” என்ற எழுத்துக்கள் வரும் வரை என் மனது வேறு எதையும் சிந்திக்கவில்லை. “ஓ. காதல் ன்னா இப்படி தான் இருக்குமா? இப்படி எல்லாம் ஆச வெப்பாங்களா? இவ்ளோ பிரச்சனை வருமா?” என்று இந்த பிஞ்சு மனதில் காதல் மீது நாட்டம் எ...

காலமென்றே ஒரு நினைவும். காட்சியென்றே பல நினைவும்

   காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ இதை படிக்கும் போது பாரதியாரின் பொய்யோ மெய்யோ பகுதி நினைவுக்கு வந்தால் அது பாரதியின் வெற்றி. ஹரிஷ் ராகவேந்திரா குரலில் இளையராஜா இசையும்  சாயாஜி ஷிண்டேவும் நினைவில் வந்தால் பாரதியாரை நினைவுபடுத்த தமிழ் திரையுலகம் எடுத்த முயற்சிக்கு வெற்றி. 2019 டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பதினோரு மணி, நான் என்னுடைய மூன்று நண்பர்களுடன் ஹாம்பர்க் மாநகரத்தின் பிரசித்தி பெற்ற துறைமுகத்துக்கு அருகே புத்தாண்டை வரவேற்கும் சிறப்பு வான வேடிக்கையை காணச் சென்றிருந்தேன். ஜெர்மனி நாட்டில் அத்தனை பெரிய கூட்டத்தை பார்த்ததே இல்லை நான். சென்னையின் ரங்கநாதன் தெரு, தீபாவளிக்கு முதல் நாள் இருக்கும் கோலம் தோற்றுவிடும். அப்படி ஒரு கூட்ட நெரிசல். நள்ளிரவு ஒரு மணியளவில் வான வேடிக்கை முடிந்தபின் 800 மீட்டர் தொலைவில் இருந்த விரைவு ரயில் நிலையத்திற்கு செல்ல 45 நிமிடங்கள் தேவை பட்டது. ஒரு மணி நேரத்தில் நாங்கள் சென்று அடைந்திருக்க வே...