Posts

Showing posts from May, 2022

தி கருவேப்பிலை தியரி ஆப் நேஷனல் எகானமி!

 நேற்று மாலை சுமார் ஆறு மணியளவில்  நான் என்னுடைய மிதிவண்டியில் ஏறி, சன்பிளவர் ஆயிலை (சூரியகாந்தி பூ எண்ணெய் ) தேடி புனித பயணம் ஒன்றை மேற்கொண்டேன். அதனால் எனக்குள் ஏற்பட்ட தெளிவுரைகள் வாசகர்களின் கனிவான கவனத்திற்கு… ஜெர்மனி நாட்டில் சூரியகாந்தி பூ எண்ணெய் பெரும்பாலும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து தான் இறக்குமதி செய்ய படுகின்றனவாம். அந்நாடுகளின் தற்போதைய நிலையினால் ஐரோப்பாவின் பல நாடுகளில் பல பொருட்கள் விலைவாசி உயர்வை கண்டுள்ளது. அதில் குறிப்பாக சூரியகாந்தி பூ எண்ணெய்க்கு ஏற்பட்டிருக்கும் மவுசு, சில மாதங்கள் முன்பு இந்தியாவில் வெங்காயம் என்று காகிதத்தில் எழுதி பிரியாணியில் போட்டு சமைத்த மவுசை போன்றதாகும். 2016 ஆம் ஆண்டு நான் முதன்முதலில் ஜெர்மனி வந்தபோது பல சரக்கு அங்காடிகளில் சூரியகாந்தி பூ எண்ணெய்  மற்றும் ரேப்சீடு எண்ணெயின் விலைகளை பார்த்து ஆச்சரிய பட்டேன். ஒரு லிட்டர் 0.75 சென்ட்ஸ். இந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி உயர்வின் காரணமாக அவை 1 யூரோ வை தாண்டி விட்டன. ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னுடைய அகக்கண்களை பல்வேறு விதமாக திறந்துவிட்டது.  “20...

போய் சேர்க்க முடியாத கடிதங்கள்!

 1999 ஆம் ஆண்டு முதல் 2016 வரை பல தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் காதலின் தாக்கமும் கவிதைகள் மீது நாட்டமும் வர காரணமாக இருந்து, கண் பேசும் வார்த்தைகள் பலவற்ற ரசிக்க வைத்த கவிஞர் அவர்களுக்கு, என் பருவ வயது மனதில், முதன் முதலில் தோன்றிய பட்டாம்பூச்சிகளுக்கு உங்கள் வரிகள் மூலம் விடை கண்டு கொண்ட கடைக்கோடி ரசிகை எழுதுவது. 2011 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் வார தொடராக வந்து, பின் புத்தகமாக வெளியிடப்பட்ட உங்களின் “அணிலாடும்  முன்றில் ” எனும் அற்புதமான படைப்பை நான்கு நாட்கள் முன்பு படித்து முடித்தேன். நீங்கள் இந்த புத்தகத்தை எழுதும் போது எதை நினைத்து எழுதுனீர்களோ, உங்களுடைய மறைவுக்கு பின்னர் படிக்கும் போது நீங்கள் எதிர்பார்த்த உணர்வுகளை மிஞ்சி கொண்டு வந்து நிற்கிறது உங்களுக்காக சில கண்ணீர் துளிகள். என்னளவில் பல கண்ணீர் துளிகள். நான்கு நாட்களாக உங்கள் பாடல்கள், நீங்கள் அளித்த பேட்டிகள், உங்களை பற்றி பேசிய பேட்டிகள் ஆகிவற்றை தேடித் தேடி பார்த்துக் கொண்டு நீங்கள் இல்லாமல் போய்  ஐந்து வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது என்ற உண்மையை ஏற்க முடியாத மனநிலையில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். நான்கு நாட...

நினைவுகள் தொடர்கதை

  ச ரியாக பத்து ஆண்டுகளுக்கு முன். மாலை மங்கும் வேளை. கோடை மழை சில்லென்ற காற்றுடன் வந்து சேர்ந்த நேரம். ஜூன் மாதம் கோடை விடுமுறை முடிந்து கல்லூரி மீண்டும் திறந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. மஞ்சள் வண்ண பொறியியல் கல்லூரி பேருந்து ஒன்று ஆள் இல்லாத நெடுஞ்சாலை ஒன்றில் தாலாட்டி தூங்க வைக்கும் ரயில் வண்டியை போல சென்றுகொண்டிருந்தது. அந்த கல்லூரியில்  ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர்  அதிகம் பேச அனுமதி இல்லை. பேருந்தில் முன் ஐந்து இருக்கைகள் பெண்கள். பின்னே உள்ளவை ஆண்கள். இடையே கம்பி கட்டியிருக்கும். 52 வயது ஓட்டுநர் மட்டும் தான் பெண்கள் இருக்கைகள் அருகே இருக்கும் முன் கதவை பயன் படுத்தும் ஒரே ஆண். 30 வயது நடத்துநர் கூட பின் கதவின் வழியே வந்து ஆண்பெண் பிரிவினை அருகில் அமர்ந்து கண்கொத்தி பாம்பாய் பார்த்துக்கொள்வார். முக்கியமாக கைபேசிகள் உபயோகித்தல் கொலை குற்றத்தை போன்றதாகும். பாடல்களாவது போடுங்கள் என்று ஐந்து வருடத்திற்கு மேல் விண்ணபங்கள் கொடுத்து ஒரு வழியாக முன்னே ஓட்டுநர் இருக்கை அருகே வானொலி, பேருந்தின் மத்தியிலும் பின்னேயும் ஒரு ஒலிபெருக்கி பொருத்தப்பட்டது. அந்த ஊரில் எடுக...